Last Updated : 21 Dec, 2014 11:28 AM

 

Published : 21 Dec 2014 11:28 AM
Last Updated : 21 Dec 2014 11:28 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 6

சோவியத்துடன் ஆப் கானிஸ்தான் அதிக நட்புடன் பழகுவது பிடிக்காத பிரிட்டன் உடனடியாக ஒரு காரியத்தைச் செய்தது. இந்தியா வழியாக நடைபெற்ற ஆப்கானிய வணிகத்துக்குத் தடை விதித்தது.

சோவியத் யூனியன் ஈடு செய்தது. சோவியத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றனர். தந்தி, தொலைபேசி போன்ற தகவல் தொடர்பு சேவைகள் தொடங்கப்பட்டன. ஆப்கானிய இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும் வழங் கப்பட்டது. விமானம் ஒட்டவும், ஆப்கன் ராணுவத்தினருக்கு சோவியத் பயிற்சி அளித்தது.

அதே சமயம் சோவியத் யூனியனில் தயாரான பொருள்கள் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. உலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என நினைத்திருந்த பிரிட்டனுக்கு இதெல்லாம் கொஞ் சமும் பிடிக்கவில்லை. பிரிட்ட னுக்கு அருமையான வாய்ப்பு ஒன்று விரைவிலேயே கிடைத்தது.

பல புரட்சி திட்டங்களை தன் நாட்டில் அறிமுகப்படுத்திய மன்னர் அமானுல்லா வேறொன்றி லும் தெளிவு காட்டினார்.

‘ராணுவத்தினரையும், இனத் தலைவர்களையும் வளர விடுவது தனக்கும் நல்லதில்லை, தன் நாட்டுக்கும் நல்லதில்லை’. ராணுவ அதிகாரிகளின் சம்பளத்தைக் குறைத்தார். ராணுவ வீரர்களின் எண்ணிக் கையைக் குறைத்தார். முக்கிய மாக நடுவயதைத் தாண்டிய அத்தனை ராணுவ அதிகாரி களையும் வெளியேற்றினார்.

ஆப்கானிஸ்தான் அரசின் ராணுவ அமைச்சர் முகமது நாதிர் கானுக்கு இது பிடிக்கவில்லை. அவர் பதவி விலகினார். பிரான்ஸ் நாட்டின் ஆப்கன் தூதரானார்.

மன்னர் அமானுல்லா கொண்டு வந்த சில சட்டங்கள் நவீன மயமானவை.

‘இனி அடிமைகள் கூடாது. பெண்கள் தங்களைத் திரையிட்டு மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. காபூலில் சில பகுதிகளில் மேலை நாட்டு நவீன உடைகளை அனுமதிக் கலாம். சிறுவர்களுக்கு மதச்சார் பற்ற கல்விதான் அளிக்கப்பட வேண்டும். வரி விதிப்பு தர்க்க ரீதியானதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். ஊழல் கூடாது. வரவிருக்கும் முதல் பட்ஜெட்டி லேயே மெட்ரிக் முறை அமலுக்கு வரும். ஆப்கானின் என்ற புதிய நாணயம் அறிமுகமாகும்’ என்று அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இப்படிப் பல மாறுதல்களை கொண்டு வர வேண்டும் என்பதை வெளிப் படுத்தியதுடன் அவற்றிற்கான நடவடிக் கைகளையும் எடுக்கத் தொடங்கினார்.

ஒரே சமயத்தில் இத்தனை மாறுதல்களா! மக்களில் பலருக்கும் தயக்கம் இருந்தது. அதுவும் ஓரிரு சீர்திருத்தங்களைப் பிடிக்காதவர்கள்கூட ஒட்டு மொத்தமாகவே சீர்திருத்தங் களை குறைகூறத் தொடங்கி னார்கள். ஆனால் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தான் சரித்தி ரத்தில் மிக அழுத்தமாக தன்னு டைய முத்திரையைப் பதித்தார். 1923ல் ஆப்கானிஸ்தானின் முதல் அரசியலமைப்புச் சட்டம் இவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. உரிமைகளும், கடமை களும் வரையறுக்கப்பட்டன. குடிமக்களுக்கான அடையாள அட்டைகளை அப்போதே அறிமுகப்படுத்தினார். அரச குடும் பத்தினருக்கான மானியங் களுக்குத் தடை விதித்தார்.

இப்படியெல்லாம் செய்த மாறுதல்களை தீவிர மதத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைத்ததை ராணுவத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆக ஆப்கானிஸ்தானின் இரண்டு பலம் பொருந்திய பிரிவு கள் அமானுல்லா கானை அந்நியனாக கருதத் தொடங்கின.

இந்தப் போக்கு அமானுல் லாவுக்கு வருத்தத்தை அளித்தது. உடல் பலவீனமும் அடைந்தார். இத்தாலிக்குச் சென்று தலை மறைவு வாழ்க்கை நடத்தி னார். பின்னர் சுவிட்சர்லாந்து சென் றார். ஜுரிச்சில் அவர் காலமான தாகச் சொல்கிறார்கள். ஆக குறிப்பிடத்தக்க ஒரு ஆப்கானியத் தலைவரின் வாழ்க்கை அலைக்கழித்தலிலும், அனுமானங்களிலும் முடிவடைந் தது! அமானுல்லா கான் ஆட்சியை விட்டு விலகியதும் கொஞ்ச காலத்துக்கு சர்தார் அலி அகமத் கான் என்பவர் ஆட்சி செய்தார்.

அமானுல்லா ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்த நாதிர் கான் தன் தம்பிகளு டன் சேர்ந்து ஒரு பெரும்படை யுடன் காபூலை நோக்கிப் படை யெடுத்தார். அடுத்த ஆறே நாட் களில் ஆட்சி மாறியது நாதிர் கான் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

அமானுல்லா கான் அறிவித்த சீர்திருத்தங்களை எல்லாம் அலட்சியப்படுத்தினார் நாதிர் கான். ராணுவத்தினரைத் தொடர்ந்து அதிகரித்தார். புரட்சி யாளர்களை அடக்க அவரது ராணுவம் பெரிதும் உதவியது.

நாளடைவில் வன்மம் கொண்ட இளைஞன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப்பின் ஆட்சியைப் பிடித்தவர் அவர் மகன் ஜாகிர் ஷா. ஆப்கானிய மன்னராட்சித் தொடரில் இறுதி இடத்தைப் பிடித்தவர் இவர்.

1935-ல் ஆப்கானிஸ்தானுக்கு ஜெர்மானியத் தொழில் மேதை கள் விஜயம் செய்தனர். தங்கள் தொழிற்சாலைகளையும், நீர்மின் நிலையங்களையும் தொடங் கினார்கள். இந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ (ஐ.நா.வின் முன் னோடி) அமைப்பின் உறுப்பின ரானது. அமெரிக்கா ஆப்கானிஸ் தானுக்கு அங்கீகாரம் அளித்தது. இராக், இரான், துருக்கி ஆகிய அண்டை இஸ்லாமிய நாடுகளு டன் ஆப்கானிஸ்தான் உடன் படிக்கை செய்து கொள்ள அமைதிப் போக்கு கொஞ்சம் தொடங்கியது.

ஆனால் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. இரண்டாம் உலகப்போரில் தன் நாடு நடுநிலை வகிக்கும் என்றார் மன்னர் ஜாகிர் ஷா.

போர் முடிவதற்கு சிறிது முன் பாக ஷா மகமூது என்பவர் பிரதமரானார். அரசை விமர்சித்த வர்களை கருணையின்றி நடத்தி னார். அரசை எதிர்த்த நாளி தழ்களுக்கும், நடுநிலை நாளிதழ் களுக்கும் மூடுவிழாக்கள் நடத்தப் பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதனால் புரட்சியாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். இந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ் தானுக்கும், சோவியத் யூனியனுக் கும் நடுவே தூதரக உறவு இருந்ததே தவிர, குறிப்பிட்ட வணிகம் எதுவும் இந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற வில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது. பிரிட்டன் இந்தி யாவை இரண்டாகப் பிரித்து விட்டு, சுதந்திரம் வழங்கிவிட்டு தன் ஊருக்கு நடையைக்கட்டியது.

இந்த நிலையில் தனது பொருளாதாரம் மற்றும்தொழில் நுட்பம் தன்னிறைவு அடைவதற் காக அமெரிக்காவின் உதவி யைக் கோரியது ஆப்கானிஸ் தான். தனது தென்பகுதியில் தரிசு நிலமாகக் கிடந்த பகுதி களில் தொழிற்சாலைகள் நிறு வலாம் என்றது. ஊக்கத் தொகை களையும் அளிக்க முன் வந்தது ஆப்கானிஸ்தான். ஆனால் அமெரிக்கா இந்தச் சலுகை களை சந்தேகத்துடன் நோக்கியது.

ஆப்கானிஸ்தான் பிரதமர் ஷா மகமூது, அமெரிக்க ஜனாதிபதி ட்ருமனிடம் ‘’எங்களுக்கு போர் ஆயுதங்களை விற்க முடியுமா?’’ என்று கேட்டார். அமெரிக்கா கலவரம் அடைந்தது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x