Published : 15 Mar 2017 11:00 AM
Last Updated : 15 Mar 2017 11:00 AM
இரவில் ஒளிரும் புளோர சென்ட் தவளை அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாள்தோறும் புதிய உயிரினங்கள் பற்றிய கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பகல் பொழுதுகளில் அந்த தவளையின் வண்ணம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நேரங்களில் தெரிகிறது. ஆனால் இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள புள்ளிகளும் அடர் நீலத்திலும் மற்ற பகுதிகள் புளோரசென்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன. குறுகிய அலை நீளம் கொண்ட ஒளியை உறிஞ்சி, பின்னர் நீண்ட அலை நீளத்தில் ஒளியை உமிழ்வது புளோரசென்ஸ் இயல்பு. அந்த இயல்பு இந்த அரிய வகை தவளையிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பவளப் பாறைகள், மீன், சுறாக்கள், கடல் ஆமை போன்ற பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களிடத்திலும், நிலத்தில் வாழும் சில வகை கிளிகள் மற்றும் தேள்களிடம் மட்டுமே புளோரசென்ட் இயல்பு இருந்தது முன்பு அறியப்பட்டது. தற்போது தவளையிடமும் அந்த இயல்பு இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மனிதனைத் தவிர, பிற உயிரினங்களுக்கு இந்த இயல்பு ஏன் இருக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். எனினும் பாலின ஈர்ப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தென் அமெரிக்க நாடான சூரி நாமில் ஏற்கெனவே ஊதா நிறத்து டன் மின்னும் தவளை 2006-ம் ஆண்டு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT