Last Updated : 28 Apr, 2015 10:25 AM

 

Published : 28 Apr 2015 10:25 AM
Last Updated : 28 Apr 2015 10:25 AM

அமெரிக்காவை தாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம்

அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2001 செப்டம்பர் 11-ம் தேதி தாக்குதல் போன்று அமெரிக்கா மீது மீண்டும் ஒரு பயங்கர தாக்குதல் நடத்துவோம் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே ஐ.எஸ். அமைப்பின் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டபோது அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தலைநகர் வாஷிங்டன் உட்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x