Last Updated : 20 Nov, 2015 09:43 AM

 

Published : 20 Nov 2015 09:43 AM
Last Updated : 20 Nov 2015 09:43 AM

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 7

வாரம் இருமுறை லைசன்ஸ் தொடர்பான சரிபார்ப்பை அரசு செய்தது. உரிய லைசன்ஸ் இல்லாத வர்களுக்குக் மிகக் கடுமையாக அபராதங்கள் விதிக்கப்பட்டன. ஒருமுறை ஸ்காட்லாந்து நாட்டு சுரங்கத் தொழிலாளி ஒருவரை பலர் சேர்ந்து அடித்துக் கொன்று விட்டனர். என்றாலும் அந்தக் கொலைகாரர்கள், சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பிவிட்டனர். இதற்குக் காரணம் ஒரு நீதிபதி என்ற தகவல் பரவியது.

இதைத் தொடர்ந்து சுரங்கம் வெட்டுபவர்கள் அக்டோபர் 17 அன்று ஒரு கூட்டத்தை நடத்தினர். விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை நீதிக்கு முன் மீண்டும் நிறுத்த வைப்போம் என்றார்கள். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் பென்ட்லிக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலையும் தீக்கிரையாக்கினார்கள்.

(பென்ட்லி என்பவர் மேற்குறிப் பிட்ட கொலையைச் செய்தும் தப்பித்தவர்களில் முக்கியமான வர்). இதைத் தொடர்ந்து தீ வைத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மூன்று பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் சுரங்கம் வெட்ட லைசன்ஸ் வழங்கு வதை நிறுத்த வேண்டுமென்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அனை வருக்குமே வாக்குரிமை வேண்டு மென்றும் அவர்கள் வலிமையாகக் குரல் எழுப்பினர். (அனைவருக்கும் என்றால் குறிப்பிட்ட வயது நிரம்பிய அனைத்து ஆண்களுக்கும் என்றுதான் அர்த்தம். ஏனென்றால் உலக அளவில் அப்போது எந்தத் தேர்தலிலுமே பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது).

நவம்பர் 29, 1854 அன்று மற்றொரு பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுரங்க வேலை செய்பவர்கள் தாங்கள் பெற்றிருந்த லைசன்ஸ்களை பகிரங் கமாகவே எரித்தார்கள். அதோடு தென்சிலுவைக் கொடி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். பின்னாளில் ‘யுரேகா கொடி’ என்று இது பிரபலம் அடைந்தது.

1855-ல் சீனர்களுக்கு எதிரான ஒரு சட்டம் இயற்றப்பட்டது. தங்க வேட்டை நோக்கத்தில் எக்கச்சக்க மான சீனர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட, (சுமார் அரை லட்சம்பேர்) சீனர்களுக்கு எதிரான போக்கு பரவத் தொடங்கியது.

சட்டம் அமுலுக்கு வந்ததும் பல சீனர்கள் பிரிட்டிஷ் பிரஜைகளாகி விட சம்மதித்து விட்டனர். இதைத் தொடர்ந்து காய்கறி மற்றும் பழ விளைச்சலில் அவர்கள் முன்னணி வகித்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு சீனக் கப்பல் மெல்போர்ன் துறை முகத்தை நோக்கிப் பயணம் செய் தது. அங்கு அந்த கப்பல் நுழை வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிட்னி துறை முகத்துக்கு அந்தக் கப்பல் வந்து சேர்ந்தது.

இந்தக் கப்பல் வருவது தெரிந்த தும் பெரும் கூட்டம் ஒன்று நாடாளுமன்றத்தை முற்றுகை யிட்டது. சீனப் பொருள்களை ஆஸ்திரேலியாவில் இறக்க அனு மதிக்கக் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். பிரதமர் பார்கேஸ் இதை ஏற்றுக் கொண்டார். ‘இந்த மறைமுகமான சீன முற்றுகையை நான் தடுத்து நிறுத்துவேன்’ என்றார்.

சீன வணிகர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். ‘‘ஆஸ்திரேலியாவில் நிரந்தர மாகத் தங்கிய சீனர்கள் இறக்கு மதி செய்யும் பொருள்கள் இவை. எனவே கப்பலில் வந்து சேர்ந்த பொருள்களை சிட்னி துறைமுகத் தில் இறக்க அனுமதிக்கலாம்’’ என்றது நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் பிரதமர் இதை ஏற்கவில்லை.

இப்போதும்கூட சீனாவும் ஆஸ்திரேலியாவும் நண்பர்கள் அல்ல.

தென் சீனக்கடலில் சீனா இப்போது ஒரு தீவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளெல்லாம் பதற்றமடைந்திருக்கின்றன. அந்தப் பகுதியிலுள்ள 200 சிறு சிறு நிலத்திட்டுகளை சீனா, வியட்நாம், தைவான் ஆகியவை சொந்தம் கொண்டாடுகின்றன. அந்தத் திட்டுகளின் சிறு பகுதிகளை ப்ரூனே, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகியவை தங்களுக்கு உரியது என கூறிவருகின்றன.

இந்த நிலையில் சீனா அங்குள்ள ஒரு பெரிய நிலத்திட்டில் தனக்கென்று ஒரு தீவு அமைத்துக் கொள்ள முயற்சிப்பதைப் பிற நாடுகள் விரும்பவில்லை.

‘‘இருதரப்புப் பேச்சு வார்த்தை நடத்தலாமே’’ என்று பிலிப்பைன்ஸ் பிரதமருக்கு சீன அதிபர் அழைப்பு விடுத்தார். ஆனால் இதை ஏற்க மறுத்துவிட்டார் பிலிப் பைன்ஸ் பிரதமர். ‘’ப்ரூனே, மலேசியா, வியட்நாம், தைவான் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சேர்த்து வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும் என்கிறார். சீனா வுக்கு இதில் தயக்கம் இருக்கிறது.

சீனாவின் இந்தத் தீவுக் கட்டுமானத்தைத் தொடர்ந்து சுற்றி யுள்ள நாடுகளில் பலவும் அமெரிக் காவின் உதவியை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டன. ஏனென்றால் சீனாவுக்கு எதிராக என்றால் அமெரிக்க உதவி தாராளமாகக் கிடைக்கும் என்பது அந்த நாடுகளின் எண்ணம்.

அமெரிக்க ராணுவத் தலைமை யகமான பென்டகன் சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக் கிறது. ‘’கடந்த இரண்டே வருடங் களில் சீனா, தென்சீனக்கடலில் உள்ள 1174 ஹெக்டேர் பரப் புள்ள நிலத்திட்டுகளை ஆக்கிரமித் துள்ளது’’ என்கிறது அந்த அறிக்கை.

பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் பதற்றத் துடன் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ‘‘ஆஸ்தி ரேலியா எந்த ஒரு தரப்பையும் ஆதரிக்கக் கூடாது. நடு நிலையோடு விளங்க வேண்டும்’’ என்றிருக்கிறார்.

ஆஸ்திரேலியா மெளனம் சாதிக்கிறது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x