Last Updated : 19 Nov, 2015 10:14 AM

 

Published : 19 Nov 2015 10:14 AM
Last Updated : 19 Nov 2015 10:14 AM

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 6

பிரிட்டிஷ் பிரதிநிதியான கவர்னர் அவசர அவசரமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ‘ஒவ்வொரு மாதமும் அரசு தரும் லைசன்ஸை உரிய தொகை செலுத்திப் பெற்றவர்கள் மட்டுமே அந்த மாதம் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடலாம்’.

விக்டோரியாவின் இந்த லைசன்ஸுக்கான கட்டணம் மிக அதிகமானதாக இருந்தது. இதன் காரணமாக ஏழைகள் தங்கம் தேடும் வேலையை நிறுத்திக் கொண்டு அவரவர் வேலைகளில் ஈடுபடுவார் என்று நினைத்தார் கவர்னர்.

ஆனால் இதில் புதிய சிக்கல் முளை விட்டது. விக்டோரியாவின் ஒரு பகுதியாக இன்னமும் விளங்கு கிறது பல்லாரட் என்ற இடம். இங்கும் தங்கச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன.

இந்தச் சுரங்கங்களுக்கு உரிமை கொண்டாடியவர்கள் அரசின் லைசன்ஸைப் பெற மறுத்தனர். கட்டணத் தொகை மிக அதிகம் என்றனர். அரசோ அடிபணிய மறுத்தது.

சுரங்கக்காரர்கள் புதிய தர்க் கத்தை முன்வைத்தார்கள். ‘‘சுரங்க லைசன்ஸுக்காக நாங்கள் அளிக் கும் தொகை என்பது வரியைப் போலத்தான். வரி செலுத்து பவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறவும் உரிமை உண்டு.

எனவே எங்களுக்கும் அந்த சலுகையை அளிக்க வேண்டும்’’ என்றார்கள். அதுமட்டுமல்ல தங்கள் எதிர்ப்பை விதவிதமாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

பேகெரி குன்று என்ற இடத் தில் ஒரு கோட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டு, அது தங்கச் சுரங்கக் காரர்களுக்கு உரியது என்று அறிவித்தார்கள். இதற்கெல்லாம் தலைமை தாங்கியவர் பீடர் லலோர் என்பவர். அவர் சுரங்கக் காரர்களின் தலைவர் ஆனார். போதாக்குறைக்கு அரசுக்கு எதிராக புரட்சியைத் தொடங்கினார்கள். இதற்கு யுரேகா ஸ்டாக்கேட் என்று பெயரிட்டனர். தங்களுக்கென்று ஒரு கொடியை வேறு உருவாக்கிக் கொண்டார்கள்.

பிரிட்டனால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அவர்களது ராணுவம் தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் 30க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். கோட்டையின்மீது படபடத்த புதிய கொடி ராணுவ வீரர்களால் கிழிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அது அரசு கலைக்கூடத்தில் வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு அங்கு விஜயம் செய்யும் வி.ஐ.பி.க்களுக்கு இந்தக் கொடியிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கத்தரித்து கொடுக்கத் தொடங்கினார்கள். பிரிட்டனின் நேர்மையை வலியுறுத்தும் கெளரவச் சின்னமாக இது பார்க்கப்பட்டது. மகாராணி இரண்டாம் எலிசபத்துக்குக்கூட இதிலிருந்து ஒரு பகுதி அனுப்பப்பட்டதாம்.

அதற்குப் பிறகு ஆஸ்திரேலிய சரித்திரத்தில் இந்தக் கொடி (ஒரு கொடி கிழிக்கப்பட்டால் என்ன? அதைப்போல பல கொடிகளை உருவாக்க முடியாதா? என்ன?) பல முறை பல புரட்சிகளுக்குப் பயன் படுத்தப்பட்டது. ஆக சுரங்கக்காரர் களால் உருவாக்கப்பட்ட இந்தக் கொடி அரசுக்கு எதிராகப் புரட்சிகள் செய்யும் பலருக்கும் பொதுவான கொடியானது.

பல தொழிற்சங்கங்கள் இந்தக் கொடியைப் பயன்படுத்தத் தொடங்க, அரசுக்கு கடும் எரிச்சல் உண்டானது. ‘‘எந்தக் கட்டிடத்தின் மீதும் இந்தக் கொடி பறக்கக் கூடாது’’ என்று தடை பிறப்பித்தார் அன்றைய பிரதமர் ஜான் ஹோவர்டு.

2008ல் ஒரு குறிப்பிட்ட அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விளையாட்டு ரசிகர்கள் மேற்படி கொடிகளை அசைக்க, ஆஸ்திரேலிய கால்பந்துக் கூட்ட மைப்பு இதற்குத் தடை விதித் தது. இந்தக் கொடியை வைத்தி ருப்பவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றியது. அரசியல் சின்னங்களை விளையாட்டுப் போட்டிகளின்போது பயன்படுத் துவது சரியல்ல என்று கூறியது.

ஆஸ்திரேலியாவின் ஜனநாய கமே சுரங்கக்காரர்களின் புரட்சி யிலிருந்துதான் தொடங்கியது என்பது சிலரின் கருத்து.

அதுவும் தங்கம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் லைசன்ஸ் தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் (முழுவதுமாக சுரங்கம் தோண்டி யும் தங்கம் தட்டுப்படாதவர் களுக்கு) அதிகத் துன்பத்தை அளித்தது. அந்தக் காலகட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் விக்டோரியாவிலுள்ள தங்கச் சுரங்கங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பிரிட்டனி லிருந்து வந்தவர்கள். இவர்களில் சீனர்களும் கணிசமானவர்கள் (சுமார் 40000) இருந்தனர்.

சுரங்கம் தோண்டுபவர்களில் பல அபாரிஜின்களும் கூட சம்பந்தப் பட்டிருந்தனர்.

(உலகம் உருளும்)



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x