Last Updated : 14 Nov, 2015 10:58 AM

 

Published : 14 Nov 2015 10:58 AM
Last Updated : 14 Nov 2015 10:58 AM

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 4

ஆளுனர் பிலிப்பின் ஆணைக் கிணங்க, மரங்கள் வெட்டப்பட்டன. தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டன. ‘’முடிந்தவரை அங்கிருக்கும் பழங்குடி இன மக்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தாமலேயே குடியேற்றத்தை நிகழ்த்த வேண்டும்’’ என்றது மேலிடத்து உத்தரவு. இதற்கு இயோரா என்ற உள்ளூர் இனத்தைச் சேர்ந்த பெனெலாங் என்பவரைப் பயன்படுத்திக் கொண்டார் பிலிப்.

பெனெலாங் வெள்ளையர்களின் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் நன்கு புரிந்து கொண்டவராக இருந்தவர். ஆங்கிலேயர்களுக்குப் பெரிதும் உதவினார். அவர் பெயரை ஓரிடத்திற்குச் சூட்டினார்கள் ஆங்கிலேயர்கள். அதன் பெயர் பெனலாங் முனை. இன்றைய பிரபல சிட்னி ஒபேரா ஹவுஸ் இருப்பது அந்த இடத்தில்தான்.

பழங்குடி இனத்தவர் பதறிப் போனார்கள். தங்கள் நிலங்களெல் லாம் பறிபோகின்றனவே! போதாக் குறைக்கு பெரியம்மை நோய் வேறு அவர்களைத் தாக்கியது. கொத்துக் கொத்தாக இறந்தார்கள். வெளிநாட்டு ஆட்களிடம் தங்கள் நிலங்கள் பறிபோன துக்கத்தைத் தாங்க முடியாமல் அதிக அளவில் குடிக்கத்

தொடங்க அதனாலும் இறப்பு கள் அதிகமாயின. ஒரு கட்டத் தில் பெனெலாங்கே தனது செய்கை யின் விளைவு குறித்து அதிர்ச்சி அடைந்தார். அவரும் மதுவுக்குத் தீவிர அடிமையாக அதன் காரண மாகவே இறந்தார்.

ஆஸ்திரேலியாவில் சிறைகளை உருவாக்கிய பிரிட்டன் தங்களது கைதிகளை அங்கு குடியேற்றியது. இதன் மூலம் கைதிகளுக்கு ஒரு புதுவாழ்வு அமைத்துக் கொண்ட தாகப் பெருமைபட்டுக் கொண்டது பிரிட்டன். அந்தக் கைதிகள் பிரிட்டிஷ் குடியேற்றத்துக்கு உதவி னார்கள்.

நியூ செளத் வேல்ஸின் கவர்ன ராக நியமிக்கப்பட்ட பிலிப் கைதி களுக்கு ஒரு சலுகை கொடுத்தார். நடுநடுவே கொஞ்ச காலம் அவர் களுக்குச் சுதந்திரம் வழங்கப்படும். அதாவது ‘பரோல்’. இந்தக் காலக் கட்டங்களில் அவர்கள் தங்களுக் குப் பிடித்த இடத்தில் வசித்து, தங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யலாம்.

ஆனால் புதிய சிக்கல் முளைத்தது. பெண் கைதிகளும் பிரிட்டனிலிருந்து ஏராளமாக அனுப்பப்பட்டனர். இவர்கள் ஆண் கைதிகளால் தொடர்ந்து பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாயினர்.

1803ல் ஆங்கிலேய அதிகாரிகள் மற்றொரு கடும் சிறையை நியூ சவுத் வேல்ஸில் உருவாக்கினர்.

இந்தப் பின்னணியை எல்லாம் மறந்துவிட்டு இன்றயை ஆஸ்திரேலியாவில் 1788 ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியா தினம் என்று கொண்டாடுகிறார்கள். அதுதான் சிட்னிக்கு ஆங்கிலேயக் கப்பல் முதலில் வந்த தினம். இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கும்

வெள்ளையர்களின் முன்னோர் களில் யாராவது ஒருவராவது கைதியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

அதே சமயம் தனியார் நிறுவனம் ஒன்று தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு என்ற இடத் தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இது கொஞ்சம் வித்தி யாசமாக இயங்கியது. அபாரிஜன் களிடமிருந்து நிலத்தை வாங்குவது, அப்படி வாங்கிய நிலத்தை ஆங்கி லேயர்களுக்கு அதிக விலைக்கு விற்பது. கிடைக்கும் லாபத்தைக் கொண்டு பண வசதி இல்லாத, பிரிட்டிஷ் தொழிலாளிகளை ஆஸ்தி ரேலியாவில் குடியேற்றுவது. ஒரு கட்டத்தில் பொருளாதார சீர்குலைவு காரணமாக இந்த நிறுவனத்தை அரசே எடுத்துக் கொண்டது.

ஆங்கிலேயர்களின் குடியேற் றத்தால் அபாரிஜின்கள் எனப்படும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் கடற்கரைப் பகுதிகளிலிருந்து மேலும் மேலும் உள்ளுக்குத் தள்ளப் பட்டார்கள். துப்பாக்கி முனையில் இப்படி இடம் மாறிய மக்கள் புதிய நிலங்களில் தண்ணீரையும், உணவையும் தேடி தவிக்க நேர்ந்தது. குடியேறிகள் மீது பழங்குடி மக்கள் தங்களால் இயன்ற தாக்குதலைச் செய்தார்கள். அவர்களது கால்நடைகளைக் கொல்வது அதில் முக்கிய வழி யாக இருந்தது. பதிலுக்கு வெள் ளையர்கள் பழங்குடி இனமக்கள் தங்கிய பகுதிகளிலுள்ள தண்ணீரில் விஷம் கலந்தனர். நேரடிப் போராட் டங்களும் நடைபெற்றன. பழங்குடி இனங்களில் தலைவர்கள் உரு வாயினர். ஆனால் காலப்போக்கில் ஆங்கிலேயர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் பழங்குடி மக்களுக்கு

ஏற்பட்டது. மிகக் குறைவான கூலிக்கு ஆங்கிலேயர்களிடம் வேலை பார்க்கத் தொடங்கினர்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x