Published : 28 Mar 2015 11:17 AM
Last Updated : 28 Mar 2015 11:17 AM
பூந்தமல்லி சாலையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பூந்தமல்லி சாலையில் போலீஸார் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பாக்கம் அருகே வேகமாக வந்த மினி வேன், சாலையோரம் நிறுத்தப்பட்டது. அந்த வேனில் இருந்த மரக்கட்டைகளை சிலர் அருகில் இருந்த மற்றொரு டெம்போவுக்கு மாற்றிக் கொண் டிருந்தனர்.
போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். இதனைப் பார்த்த போலீஸார், அவர்களை விரட்டிச் சென்றனர். தப்பியோடிய 6 பேரில் 4 பேரைப் பிடித்தனர்.
பின்னர் அந்த வேனை போலீஸார் சோதனையிட்டதில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 18 சந்தனக் கட்டைகள் அதற்குள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார் விரட்டிப் பிடித்த ரவி (41), முருகன் (23), அர்ஜூன் (24), யுவராஜ் (22) ஆகியோரிடம் சந்தனக் கட்டைகளை எங்கிருந்து கொண்டு வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT