Published : 27 Mar 2015 11:31 AM
Last Updated : 27 Mar 2015 11:31 AM

ராசிபுரம் அருகே பள்ளி மாணவி கொலை: சக மாணவர் உட்பட 3 பேர் கைது

ராசிபுரம் அருகே பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சக மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம் அடுத்த இலக்கியம் பட்டியைச் சேர்ந்த 16 வயது மாணவி ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெரியமணலி அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

அவர் வியாழக்கிழமை பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த தந்தை, மகளை தேடி பள்ளிக்கு சென்றபோது, வழியில் உள்ள குடிசையின் முன்பு ராதிகாவின் சைக்கிள் இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் பார்த்த போது, அங்கு ராதிகா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கிராமத்தில் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் சாக்குப் பையில் மறைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எலச்சிபாளையம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். மாணவியின் கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதையடுத்து, மாணவி கொலை தொடர்பாக நாமக்கல் எஸ்.பி. எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் திலீப் குமார் (20), ராதிகா படித்த பள்ளியில் பயிலும் 17 வயது மாணவர் தினேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திலீப் குமார் அந்த மாணவியை விரும்பி வந்ததாகவும், ஆனால் அவரோ வேறு ஒருவரை விரும்பியதால் ஆத்திரத்தில் கொலை செய்தததாகவும் ஒப்புக்கொண்டனர்.

கழுத்தை நெறித்து கொலை செய்து மாணவியின் உடலை சாக்குப் பையில் மறைத்ததாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த இருவருடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x