Published : 29 Jan 2015 02:24 PM
Last Updated : 29 Jan 2015 02:24 PM

மோடி மிக எளிமையானவர்: சூட் சர்ச்சைக்கு தமிழிசை விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எளிமையானவர் என 'சூட்' சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவுடனான சந்திப்பின்போது நரேந்திர தாமோதர தாஸ் என்று தனது பெயர் பொரிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அந்த பிரத்யேக ஆடையை தயாரிக்க ரூ.10 லட்சம் செலவானதாக எதிர்க்கட்சிகள் சில சர்ச்சையை கிளப்பின.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எளிமையானவர்.

அவர் ஒரு அயல்நாட்டுத் தலைவர் வரும்போது எப்படி தனது தோற்றத்தை அமைத்துக் கொள்ளவேண்டுமோ அவ்வாறே அமைத்துக் கொண்டார்.

உண்மை தெரியாமல், மோடியின் சூட் தயாரிக்க லட்சக் கணக்கில் செலவானதாக சிலர் விமர்சிக்கின்றனர். உண்மையில் மோடி மிகவும் எளிமையானவர். மேலும், இயல்பாக ஒரு சூட் தயாரிக்க என்ன செலவாகும் என்பது எல்லாருக்குமே தெரியும் என்றே நினைக்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x