Published : 28 Mar 2015 12:16 PM
Last Updated : 28 Mar 2015 12:16 PM

மேகேதாட்டு விவகாரம்: தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம்

கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் மேகேதாட்டு என்னுமிடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக விவசாயிகள் சங்கம் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது.

இதை எதிர்த்து கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லக்கூடிய 720 பேருந்துகளும் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தபட்டன.

இதே போல் கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 400 கர்நாடக பேருந்துகளும் கர்நாடகா டிப்போவில் நிறத்தப்பட்டன. தனியார் உள்ளூர் பேருந்துகள் மட்டும் எல்லை வரை இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x