Published : 23 Jan 2017 12:32 PM
Last Updated : 23 Jan 2017 12:32 PM

மெரினாவில் இருந்து செல்ல மறுக்கும் போராட்டக்காரர்களின் நான்கு கோரிக்கைகள்

மெரினாவில் இருந்து செல்ல மறுக்கும் போராட்டக்காரர்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் இருந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறியதாவது:

1. ஜல்லிக்கட்டு அவசர சட்டம் சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டதும், அதன் முன்வடிவு வரைவின் நகலை சென்னை மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு வழங்க வேண்டும்.

2. அவசர சட்டம் சட்டமாக இயற்றப்பட்டதும், அதுவே நிரந்தர சட்டமாகிவிடுமே என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகிய மூவரும் கருத்து பகிர வேண்டும்.

3. நாங்கள் நலமாக இருக்கிறோம். எங்களைப் பற்றி வரும் எந்த வதந்திகளையும் தமிழக சொந்தங்கள் நம்ப வேண்டாம். அறவழியில் மட்டுமே போராடுவதே நம் குறிக்கோள். அதனால் யாரும் கலவரத்தில் ஈடுபட்டு, நம் நோக்கத்தை சிதைக்க வேண்டாம்.

4.நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் பீட்டா போன்ற எந்த அமைப்பும் உச்ச நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறும் சூழல் ஏற்படாத நிலையைக் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு போராட்டக்காரர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x