Published : 26 May 2015 07:30 AM
Last Updated : 26 May 2015 07:30 AM
3 பெண் குழந்தைகளை பெற்ற தால், தன்னை புறக்கணித்து 2-வது திருமணம் செய்து கொண்ட கணவன் மற்றும் அவரது பெற் றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இளம்பெண் ஒருவர் தனது 3 பெண் குழந்தைகளோடு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. லாரி ஓட்டுநரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காட்டையன் என்பவரின் மகள் புனிதாவுக்கும் கடந்த 2005 ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஷாலி (7), மனிஷா (5), ஸ்ரீநிஷா (3) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
3 பெண் குழந்தைகள் பிறந்த தால், புனிதாவை புறக்கணித்து வந்த ராமமூர்த்தி, அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய ராமமூர்த்தி, கீழா னூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள் ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது கணவர் மீதும் அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது 3 பெண் குழந்தைகளோடு புனிதா நேற்று காலை தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், புனிதாவின் புகார் குறித்து கேட்டறிந்தார். அவரது புகார் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும் படி சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, புனிதா தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT