Published : 28 Jun 2016 08:30 AM
Last Updated : 28 Jun 2016 08:30 AM
சேலம் மாவட்டம் இடங்கணசாலை யைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் வினுபிரியா (22). பிஎஸ்சி படித்துள்ள இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸார் வினுபிரியாவின் உட லைக் கைப்பற்றி, பிரேத பரிசோத னைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத் திய விசாரணையில், வினுபிரியா முகநூல் மூலம் ஒரு இளைஞ ருடன் பழகியுள்ளார். மேலும் அடிக்கடி குறுந்தகவல் பரிமாற்ற மும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், முகநூலில் வினுபிரி யாவின் புகைப்படம் ‘மார்ஃபிங்’ செய்து மற்றொரு பெண்ணுடன் இருப்பதுபோல ஆபாசமாக வெளியாகியுள்ளது. இதை பார்த்த வினுபிரியாவின் உறவினர்கள் அவரிடம் விசாரித்தனர்.
அதிர்ச்சி அடைந்த வினுபிரியா இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீ ஸில் புகார் செய்தார். புகார் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசா ரித்து வருகின்றனர். இந்நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. முகநூலில் வினுபிரியாவுடன் பழகிய இளை ஞர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT