Published : 19 Feb 2017 08:42 AM
Last Updated : 19 Feb 2017 08:42 AM
சிதம்பரம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல்ல சிந்தனை களை போதித்த காந்திமன்றம் தொடங்கி 60 ஆண்டையொட்டி வைர விழா ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நடக்கின்றன.
1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் அப்போதைய முதல்வர் காமராஜ ரால் துவக்கி வைக்கப்பட்டது காந்தி மன்றம். 60 ஆண்டுகளை கடந்து வைர விழா காணும் இம்மன்றம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. கடந்த 1971-ம் ஆண்டு வாகீச நகரில் மனை வாங்கப்பட்டு அதில் கட்டப்பட்ட ஓட்டுக்கட்டிடத்தை தமிழ்நாடு ஆளுநர் பிரபு தாஸ் பட்வாரி திறந்து வைத்தார்.
2006-ம் ஆண்டு காந்தி மன்ற பொன் விழாவையொட்டி பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையைக்கொண்டு ஒட்டுக் கட்டிடம் கட்டப்பட்டது. பொன் விழா கட்டிடத்தை அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் முன்னிலையில் அப்போதைய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த மன்றத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், மனுபென் காந்தி, ஆச்சார்ய துளசி அடிகள், ம.பொ.சி., டாக்டர் மு.அறம், சர்தார் வேதரத்தினம், புதுவை லெப்டினன்ட் கவர்ன ராக இருந்த பி.டி.ஜாட்டி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்ய கிருபளானி, கி.வா. ஜகந்நாதன், நா.பார்த்தசாரதி, நாரணதுரைக்கண்ணன், குன்றக்குடி அடிகளார் மற்றும் பல அறிஞர்கள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தி மன்றத்தில் பகல் நேர குழந்தைகள் காப்பகம், மாலை நேர வகுப்புகள், வெள்ளிக்கிழமை தோறும் சர்வ சமய பிரார்த்தனை, மாதந்தோறும் சிந்தனை மேடை, மருத்துவ முகாம்கள் ஆகிய சமுதாய நலப்பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை கடந்த 60 ஆண்டுகளாக மன்றத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பொன் குஞ்சிதபாதம் மேற் கொண்டு வருகிறார். மன்றத்தின் செயலாளர் முனைவர் ஞானம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங் களுக்கு சென்று காந்திய கோட்பாடுகள் குறித்து உரையாற்றி வருகிறார். மன்றத்தின் துணை செயலாளர் முத்துக்குமரன் பள்ளி மாணவர்களிடையே காந்தியடி களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு காந்திய சிந்தனைகளை பரப்பி வருகிறார். 30 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் காந்திய அன்பர்கள் காந்தி மன்றத்தை வழிநடத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட காந்தி மன்றத்தின் வைர விழா ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி இன்று (19-ம் தேதி) நடக்கிறது. இதில் மதுரை காந்தி நினைவு நிதி தலைவர் க.மு. நடராஜன், டெல்லி காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ.அண்ணா மலை, தமிழ்நாடு சர்வோதய மண்டல் செயலாளர் எஸ்.டி. ராஜேந்திரன், அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் மணியன் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
கடந்த 60 ஆண்டுகளாக சிதம்பரம் வட்டப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களிடம் பல்வேறு நல்ல சிந்தனைகளையும், நல்லொழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி மெருகேற்றி நல்லமாண வர்களை உருவாக்கியதில் காந்தி மன்றத்திற்கு பெரும் பங்குண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT