Published : 09 Sep 2015 12:16 PM
Last Updated : 09 Sep 2015 12:16 PM

தென்தமிழகத்தில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு: சென்னை மாநாட்டில் ஷிவ் நாடார் உறுதி

மதுரை, நெல்லை மற்றும் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு ஹெ.சி.எல். நிறுவனம் பங்களிக்கும் என அதன் தலைவர் ஷிவ் நாடார் உறுதியளித்தார்.

தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக முதலீட்டாளர்களின் மாநாட்டில் பேசிய ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், மதுரை, நெல்லை மற்றும் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு பங்களிப்போம் என உறுதியளித்தார்.

அவர் பேசும்போது, "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு என்னை அழைத்ததை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.

தமிழகத்தில் ஏற்கெனவே ரூ.6,000 கோடி அளவில் ஹெச்.சி.எல். நிறுவனம் முதலீட்டு செய்துள்ளது. இந்நிலையில்,

மதுரை, நெல்லை மற்றும் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு எங்கள் நிறுவனம் பங்களிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இம்மாவட்டங்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஹெச்.சி.எல். முதலீடு செய்யும்.

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் 1 லட்சம் ஊழியர்களில் 35,000 பேர் தமிழர்கள். தமிழகத்தில் 20,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஏதுவாக பயிற்சியளிப்போம்.

இந்தியாவின் அறிவுசார் மையமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, தமிழகத்தில் மென்பொருள் மேம்பாட்டு மையம் அமைக்க ஹெச்.சி.எல். முடிவு செய்துள்ளது" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x