Published : 19 Feb 2017 07:12 PM
Last Updated : 19 Feb 2017 07:12 PM
சட்டப்பேரவையில் திமுகவுக்கு ஓபிஎஸ் அணி துணை போனது என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, இன்று அவர் அதிமுக அலுவலகத்தில் கூறியதாவது:
''தமிழக சட்டப்பேரவைக்கான மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர். திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுகவினர் முற்பட்டனர். திமுகவைப் பொறுத்தவரை எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பேரவைத்தலைவரின் இருக்கைக்கு சென்று, பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டப்பேரவையில் முடியாது. எனவே, தீர்மானம் முறையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது.
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் மட்டுமே விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். சபாநாயகர் நடவடிக்கைகளில் விதிமீறல் இல்லை.ஆளுநரிடம் குறை கூறவோ, நீதிமன்றம் செல்லவோ எந்த முகாந்திரமும் இல்லை.
திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு துணை போன ஓபிஎஸ் குரூப் உறுப்பிரனர்கள் தங்களுக்கு இல்லாத ஒரு உரிமையை இருப்பதாக, ஏதோ தவறு நடந்ததாக கற்பனை செய்து ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்'' என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT