Published : 23 Aug 2014 11:39 AM
Last Updated : 23 Aug 2014 11:39 AM

புதுச்சேரியிலும் யூ.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான மையம் புதுச்சேரியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலில், புதுச்சேரி மாநில அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை யூ.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான தேர்வு மையங்கள் புதுச்சேரியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 8 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

புதுச்சேரியில் தேர்வு எழுத தேர்வு செய்துள்ள வேறு மாநில மாணவர்கள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x