Published : 23 Jan 2017 02:04 PM
Last Updated : 23 Jan 2017 02:04 PM

பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு: ஊர் கமிட்டி

பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அப்பகுதியின் ஊர் கமிட்டி தெரிவித்துள்ளது.

பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊர் கமிட்டி ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு நடக்க தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் ஊர் கமிட்டி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்களுக்கு நன்றி என்றும் ஊர் கமிட்டி சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊர் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x