Last Updated : 24 Aug, 2016 12:11 PM

 

Published : 24 Aug 2016 12:11 PM
Last Updated : 24 Aug 2016 12:11 PM

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் வழக்குகள்: நிரந்தர உத்தரவு இருந்தும் பலனில்லை

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தவணை முறையில் பணப்பலன்கள் வழங்கலாம் என உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவு இருந்தபோதிலும், தனித் தனியாக உத்தரவு பெற வேண்டும் என ஊழியர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேவையில்லாமல் வழக்குகள் குவிந்து வருகின்றன.

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் பணிக் கொடை, விடுமுறை நாள் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் ஓய்வு பெற்ற பிறகும் போக்குவரத்துக் கழக அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். நஷ்டத்தை காரணம் காட்டி பணப்பலன்களை வழங்காமல் போக்குவரத்துக் கழ கங்கள் இழுத்தடித்து வருகின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நூற் றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பணப்பலன்களை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை மொத்தமாக விசாரித்த உயர் நீதி மன்ற அமர்வு, ஓய்வூதியர்களுக்கு 12 தவணைகளில் 6 சதவீத வட்டியுடன் பணப்பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற அமர்வின் இந்த உத்தரவே இறுதியானது. ஆனால், அதன்படி ஓய்வூதிய பணப்பலன்களை போக்குவரத்துக் கழக நிர்வாகம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஓய்வுபெறும் ஒவ்வொருவரும் பணப்பலன்களுக்காக நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து தனித் தனியாக உத்தரவு பெற்று வருமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறப் படுகிறது.

வழக்குகள் குவிகின்றன

ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனை வரும் நீதிமன்றத்துக்கு செல்வ தால் அவர்களுக்கு வீண் சிரமம் ஏற்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தேவையில்லாமல் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மட்டும் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்துக் கழக ஊழியர் களின் பணப்பலன்கள் தொடர்பாக 5,000-க்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தவணை முறை யில் பணப்பலன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளன. தினமும் 50 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படுகின்றன.

போக்குவரத்துக் கழக ஊழியர் களின் பணப்பலன் உட்பட ஏற் கெனவே முடிவான விவகாரம் தொடர்புடைய வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் வேலைப்பளுவை வும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்கிறது. இந்த வழக்குகளால் உயர் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. ஏற்கெனவே நீதிபதிகளின் எண்ணிக்கை குறை வாக உள்ள நிலையில், மற்ற வழக்குகளை விசாரிக்க நேரமில் லாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:

மதுரை கோட்டத்தில் 2012-ல் ஓய்வுபெற்ற 3,000 பேருக்கு இன்னும் பணப்பலன்கள் வழங்கப் படவில்லை. இவர்களில் 1,500 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மீதமுள்ளவர்களையும் நீதிமன்றத் தில் வழக்கு தொடர வைப்பதற்காக திடீர் புரோக்கர்கள் உருவாகி உள்ளனர். உயர் நீதிமன்ற அமர்வின் இறுதி உத்தரவு அடிப்படையில் போக்குவரத்துக் கழக ஊழியர் களுக்கு தவணை முறையில் பணப்பலன்களை வழங்க வேண் டும். இது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு, அரசாணை வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x