Published : 19 Dec 2014 02:41 PM
Last Updated : 19 Dec 2014 02:41 PM

நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை: கருணாநிதி

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பதில் தமிழக அரசு சற்றும் அக்கறையில்லாமல் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 93-வது பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து வாழ்த்திய பிறகு, கருணாநிதியிடம் செய்தியாளர்கள், கர்நாடக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் வகையில் அணை கட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறதே? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, "நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதிலும் தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுவதிலும் கர்நாடக அரசு முன்னணியில் இருக்கிறது. அதை எதிர்க்கிற அதே நேரத்தில் இப்பிரச்சினையைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்ற இன்றைய தமிழக அரசை நான் தி.மு.க. சார்பில் கண்டிக்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x