Published : 23 Jan 2017 09:42 AM
Last Updated : 23 Jan 2017 09:42 AM

திருவல்லிக்கேணியில் போலீஸ் குவிப்பு: இளைஞர்கள் மறியல்

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் திங்கள் கிழமை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரையிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் திரண்டு பேரணியாகச் சென்றனர்.

அப்போது திருவல்லிக்கேணியில் போலீஸாருக்கும் இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையிலும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகேயும் மாணவர்கள் திரண்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x