Published : 25 Nov 2014 11:40 AM
Last Updated : 25 Nov 2014 11:40 AM

திருமணம் ஆகாத விரக்தியில் அக்கா, தங்கை தற்கொலை முயற்சி: கழுத்தில் ரத்தக் காயத்துடன் தம்பி வெளியே ஓடிவந்தார்

திருமணம் ஆகாத அக்கா, தங்கை கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். தம்பியையும் கொலை செய்ய முயன்றனர்.

சென்னை மேற்கு தாம்பரம் ராம் நகரில் மணிகண்டன் (32) தனது சகோதரிகள் மகாதேவி (38), நிர்மலாதேவி (36) ஆகியோ ருடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். இவர்களின் தாய் இறந்துவிட்ட நிலையில், தந்தை மங்கலநாதன் 2-வது திருமணம் செய்துகொண்டு ஈரோட்டில் தனியாக வசிக்கிறார்.

தந்தை மறுமணம் செய்தது பிடிக்காமல் மணிகண்டன், நிர்மலாதேவி, மகாதேவி ஆகிய 3 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 8 ஆண்டுகளாக தாம்பரத் தில் வசிக்கின்றனர்.

திருமணம் ஆகாத சகோதரிகள்

சகோதரிகள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க மணி கண்டன் முயன்றும் சில காரணங் களால் முடியாமல் போனது. இந்நிலையில் மணிகண்டன் திருமணம் செய்து கொண்டு தனியாகச் செல்ல முடிவெடுத் ததாக தெரிகிறது.

இதனால் மணிகண்டனுக்கும் சகோதரிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே சொத்து விஷயமாகவும் பிரச்சினை இருப்பதாக கூறப்படு கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மணிகண்டனின் வீட்டுக் குள் பயங்கர சத்தம்கேட்டது. வீட்டுக்குள் இருந்து கழுத்து அறுபட்ட நிலையில் மணிகண்டன் வெளியே ஓடிவந்தார். உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த் தபோது மகாதேவி, நிர்மலாதேவி இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் மயங்கிக் கிடந்தனர்.

தாம்பரம் போலீஸார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். ஆனால் நிர்மலா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். மகாதேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடந்த சம்பவம் குறித்து மணிகண்டன் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

தற்கொலை முயற்சி

"திருமணமாகாத ஏக்கத்தில் எனது சகோதரிகள் தற்கொலை செய்ய முயன்றனர். என்னையும் தற்கொலை செய்ய வற்புறுத் தினர். ஆனால், நான் மறுத்து விட்டேன். அவர்களையும் சமாதானப்படுத்திவிட்டு அலுவ லகம் சென்றுவிட்டேன்.

இரவில் வீட்டுக்கு வந்ததும் சமையல் எரிவாயுவை திறந்து விட்டு தீ வைக்க முயன்றனர். ஆனால் தீ பிடிக்காததால் எனது கழுத்தை கத்தியால் வெட்டினர்.

நான் சுதாரித்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். அதன் பின்னர் அவர்கள் இருவரும் கழுத்தை அறுத்துக் கொண்டனர்" என்று கூறியிருக்கிறார்.

மணிகண்டன் கூறுவது உண்மையா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின் றனர். நிர்மலாதேவி இறந்துவிட்ட நிலையில், மயக்க நிலையில் இருக்கும் மகாதேவி கண் விழித்து பேசினால்தான் உண்மையான காரணங்கள் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x