Published : 23 Jan 2017 03:46 PM
Last Updated : 23 Jan 2017 03:46 PM

திருச்சி ஜல்லிக்கட்டில் 7 பேர் காயம்

திருச்சி மாவட்டம் குமுலூரில் இன்று(திங்கட்கிழமை) நடந்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 7 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டது முதல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியின் குமுலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் திருச்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 30க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க 2,000 பார்வையாளர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து கூடியிருந்தனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்கள் லால்குடியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் காயமடைந்தவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x