Published : 29 Apr 2016 12:44 PM
Last Updated : 29 Apr 2016 12:44 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். பர்கூர் மற்றும் குந்தாரப்பள்ளியில் அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடந்து வந்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு குழப்பங்களை விளைவித்து ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
கடந்த 5 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொடநாட்டில் ஓய்வு எடுத்தே நாட்களை கடத்திவிட்டார். ஓய்வு எடுப்பதற்காகவே முதல்வரானவர் ஜெயலலிதா. அவரை நிரந்தரமாக ஓய்வு எடுக்க அனுப்பிவைக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் கிருஷ்ணகிரியில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும். அரசு சார்பில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை கொண்டு வரப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT