Published : 23 Jun 2017 07:55 AM
Last Updated : 23 Jun 2017 07:55 AM
தி.நகர் சென்னை சில்க்ஸ் தரை தளத்தில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் முற்றிலும் சேதமடைந்த கட்டிடம் கடந்த 20-ம் தேதி முற்றிலும் இடிக்கப்பட்டது.
கட்டிடத்தின் 6-வது மாடியில் ஒரு பாதுகாப்பு பெட்டகமும், தரை தளத்தில் 2 பாதுகாப்பு பெட்டகங்களும் இருந்தன. அவற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. சுமார் ரூ.20 கோடியும் வைக்கப்பட்டிருந்தது. கட்டிட இடிபாடுகள் நேற்று அகற்றப்பட்டன. அப்போது, ஒரு பாதுகாப்பு பெட்டகம் மீட்கப்பட்டது. மீதமுள்ள 2 பாதுகாப்பு பெட்டகங்களும் விரைவில் மீட்கப்படும் என கட்டிடத்தை இடித்துவரும் தனியார் நிறுவனத்தினர் கூறினர். மீட்கப்பட்ட பெட்டகத்தில் பண மும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளும் இருந்த தாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT