Published : 23 Jan 2017 05:18 PM
Last Updated : 23 Jan 2017 05:18 PM

சுயலாப நோக்கம் உடையவர்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்: ஷேவாக் வேண்டுகோள்

சுயலாப நோக்கம் உடையவர்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் ட்விட்டரில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர்.இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழ் நிலை உருவானது.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். தமிழக மக்கள் தங்களது அறப் போராட்டத்தின் மூலம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக மாறினீர்கள். சுயலாப நோக்கம் உடையவர்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x