Published : 24 Aug 2016 06:24 PM
Last Updated : 24 Aug 2016 06:24 PM

சவுதியில் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சவூதி அரேபிய நாட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவமுள்ள ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கல்வி மற்றும் அனுபவத்திற்கேற்ப ரூ.53,700/­- வரை ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் அந்நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட். மற்றும் ஐந்து புகைப்படத்துடன் திருநெல்வேலி மாவட்டம் கொக்கிராக்குளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 27.08.2016 அன்று நடைபெறவிருக்கும் நேர்முகத் தேர்வில் காலை 9.00 மணிக்கு கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 044-22505886/22502267 என்ற தொலைபேசி எண்களிலும் அல்லது http:omcmanpower.com > என்ற இந்நிறுவன வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x