Published : 31 Aug 2016 09:22 AM
Last Updated : 31 Aug 2016 09:22 AM

சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் கெடுபிடி ஏன்? - துரைமுருகன் கேள்வி

சட்டப்பேரவை வளாகத்தில் எப் போதும் இல்லாத அளவுக்கு காவல் துறையினர் கெடுபிடி செய்வது ஏன் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:

துரைமுருகன்:

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எங்களது வாகனங்களைக்கூட சோதனை செய்த பிறகே அனுமதிக் கின்றனர். ஏன் இந்த கெடுபிடி?

பேரவைத் தலைவர் பி.தனபால்:

பேரவைத் தலைவரான எனக்கும், உங்களுக்கும் பாதுகாப்பு வழங்கு வதற்காகவே காவல் துறையினர் இந்த நடவடிக்கைகளை எடுத் துள்ளனர்.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

பாதுகாப்பு காரணங்களுக்காகவே காவல் துறையினர் சில நடவடிக்கை களை எடுத்துள்ளனர். விமான நிலை யத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கிறபடியெல்லாம் கேட்டு சோதனை நடத்த அனுமதிக்கிறோம். அதுபோல இங்கும் சோதனை நடத்தப்படுகிறது.

துரைமுருகன்:

பாதுகாப்புக்காக சோதனை என்பதை ஏற்கிறேன். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று மட்டும் ஏன் இந்த சோதனை? வெளியில் என்ன நடக்கிறது என்பது பேரவைக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்பிரச்சினையை எழுப்புகிறேன்.

பேரவைத் தலைவர்:

அவ்வப் போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கின்றனர். அதற்கு நாம் ஒத்துழைக்க வேண் டும். நம் அனைவரின் பாதுகாப்புக் காகவே இந்த ஏற்பாடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x