Published : 31 Jan 2015 12:32 PM
Last Updated : 31 Jan 2015 12:32 PM
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர் அதிகாரிகள் கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளனர்.
அணு உலைக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், 30 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு என்னென்ன விதத்தில் செயல்பட வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுவதே பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT