Published : 29 Aug 2014 02:25 PM
Last Updated : 29 Aug 2014 02:25 PM

உள்ளாட்சி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் அரக்கோணம், விருத்தாசலம், கடலூர், சங்கரன்கோவில் நகராட்சிகள் உள்பட ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி அன்று நடைபெறுகிறது.

கோவை மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார், தூத்துக்குடி மேயர் பதவிக்கு அந்தோணி கிரேஸி, திருநெல்வேலி மேயர் பதவிக்கு புவனேஸ்வரி போட்டியிடுவர் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அரக்கோணம் உள்பட 8 நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரக்கோணம் - கண்ணதாசன், கடலூர் - ஆர். குமரன், விருத்தாசலம் - அருள் அழகன், குன்னூர் - சரவணகுமார், புதுக்கோட்டை - ராஜசேகரன், கொடைக்கானல் - ஸ்ரீதர், ராமநாதபுரம் - சந்தான லெட்சுமி, சங்கரன் கோவில் நகராட்சி - ராஜலெட்சுமி ஆகியோர் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x