Published : 16 Sep 2015 08:11 AM
Last Updated : 16 Sep 2015 08:11 AM
இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி சொல்ல இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்த அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் பேசும்போது, ‘‘திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து தான் எழுப்பிய குற்றச் சாட்டுகள், கேள்விகள் அப்ப டியே இருக்கின்றன. அதற்கு இதுவரை பதில் வரவில்லை. இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி கூற இருக்கிறேன்’’ என்றார்.
செப்டம்பர் 2-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, ‘‘கருத்துக் கணிப்புகள் மூலம் முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் கனவு காண்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்டாலினை முன்னி றுத்தியதால்தான் திமுக தோல்வி அடைந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுகவுக்கு பின்னடைவே ஏற்படும்’’ என கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘‘தான் ஒருபோதும் முதல் வராக ஆசைப்படவில்லை. அடுத்த முறையும் கருணாநிதி தான் முதல்வர்’’ என தெரிவித் திருந்தார். அழகிரியின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்திருந்த திமுக தலைவர் கருணாநிதி, ‘‘6-வது முறையாக கருணாநிதிதான் முதல்வராக இருப்பார் என ஸ்டாலின் பலமுறை கூறிய பிறகும் அவரை ஏன் வேதனைப் படுத்துகிறார்கள் என்பது தெரிய வில்லை’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் சென்னை வந்துள்ள அழகிரி மேற்சொன்னவாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT