Published : 29 Apr 2016 07:28 PM
Last Updated : 29 Apr 2016 07:28 PM
அதிமுகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தா.பாண்டியன் அதிமுகவில் இணைய இருப்பதாக இன்று தகவல் வெளியானது. இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய, தா.பாண்டியன், ''நான் அதிமுகவில் இணைய இருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது. விஷமத்தனமாக இதுபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளனர். நான் இப்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறேன். நாளையும் இருப்பேன். ஒரு பொதுவுடமை இயக்கத் தொண்டனாகவே உயிர் துறப்பேன். எனது மகனுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பெற முயற்சிப்பதாக வெளியான செய்தியும் தவறனாது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT