Published : 23 Jun 2016 02:40 PM
Last Updated : 23 Jun 2016 02:40 PM
தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் அறுத்தெறிந்துள்ளனர்.
பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 30-க்கும் அதிகமான படகுகளையும், அதிலிருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மீனவர்களின் ஜிபிஎஸ் கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வேர்கோடு மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறும்போது, "சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் இலங்கை கடற்படையினர் அணிவகுத்துள்ளனர். தமிழக மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இந்திய கடல் எல்லைக்குள்ளேயே வந்து மீனவர் சுப்பிரமணியத்தின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியுள்ளனர். மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டாதுபோதும் அவர்களை மிரட்டியும், அதுவும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும், மீன்பிடி சாதனங்களையும் அறுத்தெறிந்திருப்பது சற்றும் நியாயமற்ற செயல்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT