Published : 28 Dec 2015 04:37 PM
Last Updated : 28 Dec 2015 04:37 PM

எழுத்தாளர் இ.ஜோ.ஜெயசாந்தி எழுதிய சங்கவை நாவலுக்கு ரங்கம்மாள் விருது

எழுத்தாளர் இ.ஜோ.ஜெயசாந்தி எழுதிய சங்கவை நாவலுக்கு, ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் விருது நேற்று வழங்கப்பட்டது.

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சார்பில் ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் விருது மற்றும் பார்பரா சீனிவாசன் நினைவு நுண்கலை விருது, இரு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு பரிசுப் போட்டிக்கு கடந்த 2013 - 2014-ம் ஆண்டில் வெளியான எழுத்தாளர் இ.ஜோ.ஜெயசாந்தி எழுதிய சங்கவை என்ற நாவல், ரங்கம்மாள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

சென்னை, கும்பகோணம், கேரள மாநிலத்தில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகள், ஆர்.எல்.பி. இசைக் கல்லூரி, புதுச்சேரி - பாரதியார் பல்கலைக்கூடம், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 22 மாணவர்கள், பார்பரா சீனிவாசன் நினைவு நுண்கலை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, கோவை அவிநாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தில் நேற்று நடைபெற்றது.

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன், எழுத்தாளர் இ.ஜோ.ஜெயசாந்திக்கு ரங்கம்மாள் விருதை வழங்கி கவுரவித்தார்.

ஓவியர் கே.பாலசண்முகம், பார்பரா சீனிவாசன் நினைவு நுண் கலை விருதுகளை தேர்வு செய்யப் பட்ட மாணவர்களுக்கு வழங்கினார்.

கஸ்தூரி சீனிவாசன் அறநிலைய மேலாண் இயக்குநர் டி.சரத் சந்திரன், விருட்சம் பதிப்பகம் நிர்வாகி அழகிய சங்கர், கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி ஆசிரியர் வி.எஸ்.டி. அருளரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x