Published : 21 Jun 2018 11:17 AM
Last Updated : 21 Jun 2018 11:17 AM

13 இடங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் உட்பட 13 இடங்களில் நாளை காலை 9 மணி முதல் 2 நாட்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிப்பது நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைக் குடிநீர் வாரியம், ஆலந்தூர் குடிநீர் வழங்கும் நிலையத்தின் பராமரிப்புப் பணிகள் 21-ம் தேதி காலை 9 மணி முதல் 23-ம் தேதி காலை 9 மணி வரை நடக்கின்றன. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பக்தவச்சலம் நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், கண்டோன்ட்மெண்ட் பகுதிகள், ராணுவ பயிற்சி நிலையம், மீனம்பாக்கம், பம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் ஆகிய பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் குடிநீர் குழாய் மூலம் வழங்க இயலாது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களுக்கு அவசர தேவையாக லாரிகளில் குடிநீர் தேவைப்படுவோர் தலைமை அலுவலகத்தை (புகார் பிரிவு) 28454040, 45674567 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், லாரி விநியோகப் பொறுப்பு வகிக்கும் உதவிப் பொறியாளரை 8144930158, துணை பகுதிப் பொறியாளரை 8144930235, ஆலந்தூர் உதவிப் பொறியாளரை 8144930365, மின்னியல் துணைப் பகுதிப் பொறியாளரை 8144930262, 12-வது பகுதிப் பொறியாளரை 8144930912 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x