Published : 21 Jun 2018 09:35 AM
Last Updated : 21 Jun 2018 09:35 AM
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 24,099 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10,026 கனஅடியாக குறைந்தது.
தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டது.
இதனால், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதனிடையே, மழை குறைந்ததால் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதையடுத்து, மேட்டூர் அணையில் நேற்று முன்தினம் விநாடிக்கு 24,099 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10,026 கனஅடியாக குறைந்தது.
அணை நீர்மட்டம் 49.78 அடியாகவும், நீர் இருப்பு 17.67 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் நீர்மட்டம் 9.5 அடியும், நீர் இருப்பு 5.5 டிஎம்சியும் அதிகரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT