Last Updated : 07 Jun, 2018 12:33 PM

 

Published : 07 Jun 2018 12:33 PM
Last Updated : 07 Jun 2018 12:33 PM

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி; அரசு மருத்துவமனையில் மரணம்: மருத்துவர் இல்லை என உறவினர்கள் புகார்

விருத்தாசலம் அருகே அரசுப்பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனை அலட்சியத்தாலேயே உயிரிழந்ததாக அம்மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி மகாலட்சுமி (13). இவர் இன்று (வியாழக்கிழமை) வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பள்ளியில் மாணவி மகாலட்சுமி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவி மகாலட்சுமியை பள்ளி நிர்வாகம் அருகிலுள்ள கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேலும், மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சையளிக்க அச்சமயத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், மாணவி மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததாலேயே மகாலட்சுமி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி, விருத்தாசலம் சேத்தியாத்தோப்பு சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x