Published : 23 May 2018 08:19 AM
Last Updated : 23 May 2018 08:19 AM
தூத்துக்குடியில் நேற்று நடந்த பயங்கர கலவரத்தை அடுத்து, தென்மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் தூத்துக்குடிக்கு விரைந்தார். அவரது உத்தரவின்பேரில் திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தலா நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 110-க்கும் மேற்பட்ட போலீஸார் கலவரத் தடுப்பு உபகரணங்களுடன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் தென்மண்டல ஐஜி அங்கேயே முகாமிட்டு பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT