Published : 19 May 2018 07:54 AM
Last Updated : 19 May 2018 07:54 AM

ஸ்டெர்லைட் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார்: எஸ்.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் பொது மேலாளர் (சட்டம்) சத்யபிரியா உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு :

தூத்துக்குடியில் தற்போதைய தாமிர உற்பத்தி ஆலைப் பிரிவுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம், கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த உரிமத்தை புதுப்பிக்க மனு அளித்துள்ளோம்.

‘மே 22 போராட்டம்’ என்ற தலைப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் ஆட்கள் திரட்டப்படுகின்றனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரை நியமிக்க மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் விசாரித்து, ஆலை பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரை நியமனம் செய்ய வேண்டும், ஆலையை சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் மே 21-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண் டும் எனவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x