Published : 17 May 2018 07:29 AM
Last Updated : 17 May 2018 07:29 AM
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடர்வதால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சித் தலைவர்களின் கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
டெல்லியில் அலுவலகம்
காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ‘காவிரி மேலாண்மை வாரிய தலைமை அலுவலகத்தை டெல்லியில் அமைக்க வேண்டும்’ என தமிழக அரசு வலியுறுத்தியது. இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடக்கவுள்ளது.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கவிருந்த 9 கட்சித் தலைவர்களின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி பிரச்சினை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 17-ம் தேதியும் விசாரணை தொடர்வதால் ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (இன்று) நடக்கவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT