Published : 18 Mar 2018 02:56 PM
Last Updated : 18 Mar 2018 02:56 PM

30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம்: தமிழிசை உறுதி

வரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது,

“மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என சொல்லும் காங்கிரஸ் பின்னோக்கி செல்கிறது. எதைக் கொண்டு வைத்தாலும் தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட்தான் வாங்கும். தேர்தலில் மக்கள் எடுக்கும் முடிவை இயந்திரத்தின் மீது போட்டு காங்கிரஸ் கொச்சைப்படுத்த வேண்டாம்.

திராவிட நாடு குறித்த கருத்தில் ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார். அதிமுகவை பா.ஜ., இயக்குவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x