Published : 18 Mar 2018 12:51 PM
Last Updated : 18 Mar 2018 12:51 PM

சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்

சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள குளோபல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடராஜனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த டி.டி.வி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார். திருமாவளவன், நெடுமாறன் உள்ளிட்டோர் நடராஜனைப் பார்க்கச் சென்றுள்ளனர்.

மேலும், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x