Published : 18 Mar 2018 12:30 PM
Last Updated : 18 Mar 2018 12:30 PM
ராஜாளி பறவையின் காலில் சிக்கிய புழுவைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியைத் தொடங்கி புதிய கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். அந்த விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். கட்சிப் பெயரில் அண்ணா இல்லை, திராவிடமும் இல்லை என்று சம்பத் விமர்சனம் செய்திருந்தார்.
இதனையடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாவது, “இன்னல் சூழ்ந்த காலக்கட்டத்தில் தினகரனுக்கு துணை நின்றேன். தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழிவாங்கப்பட்ட போது பக்கபலமாகவும், தக்க துணையாகவும் இருக்கத் தீர்மானித்தேன்.
அவரைச் சிகரத்துக்குக் கொண்டு செல்ல என் சிறகுகளை அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்குக் கீழ் சிக்கிய புழுவைப் பார்ப்பதுபோல்தான் என்னைப் பார்த்தார்கள்.
என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை. அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT