Published : 18 Mar 2018 07:47 AM
Last Updated : 18 Mar 2018 07:47 AM

ஆளுங்கட்சியினருக்கும் ஸ்டாலினுக்கும் ரகசிய உடன்பாடு: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழகாவட்டாங்குறிச்சியில் இலட்சிய திமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்து.

விழாவில், கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் டி.ராஜேந்தர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுங்கட்சியினருக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது. அதனால் தான் ஸ்டாலின் கல்லூரிக்கு செல்வது போல சட்டசபைக்கு சென்று வருகிறார். தற்போது காவிரி பிரச்சனைக்காக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, ராஜினாமா செய்யாதது ஏன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x