Published : 26 Feb 2018 07:21 AM
Last Updated : 26 Feb 2018 07:21 AM

நடிகை ஸ்ரீதேவியின் சொந்த ஊரில் மக்கள் சோகம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு 13.8.1963-ம் தேதி மகளாகப் பிறந்தவர் ஸ்ரீதேவி. இவரது உடன் பிறந்த சகோதரி லதா.

ஸ்ரீதேவி நான்கு வயதில் துணைவன், கொலை வழக்கு, கந்தன் கருணை ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இதில் முதலில் கந்தன் கருணை திரைப்படம் வெளியானது.

தந்தை ஐயப்பன் கடந்த 1989-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக ஸ்ரீதேவி தேர்தல் பிரச்சாரம் செய்தார். இருப்பினும் அந்த தேர்தலில் ஐயப்பன் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதேவி மரணத்தால் அவர் பிறந்த ஊரான மீனம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x