Published : 24 Feb 2018 10:12 AM
Last Updated : 24 Feb 2018 10:12 AM

தமிழிசைக்கு கொலை மிரட்டல்: மாம்பலம் போலீஸில் பாஜக புகார்

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை கடிதம் ஒன்று வந்தது. அதில் 4 உடையார்பாளையம் தபால் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் “பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டான் உடை யார்பாளையம் பகுதிகளில் தாங்கள் சுற்றுப் பயணம் செய்வதாக விபரம் அறிந்தோம். தாங்கள் எங்கள் கட்சியின் தலைவரை தாக்கிப் பேசியுள்ளீர்கள். ஆகையால் தாங்கள் எங்கள் மாவட்டத்துக்கு வரக்கூடாது. மீறி வந்தால் உங்களை கொலை செய்து விடுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஆர்.சவுந்தரராஜன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x