Published : 23 Feb 2018 01:58 PM
Last Updated : 23 Feb 2018 01:58 PM

தயார் நிலையில் மானிய விலை ஸ்கூட்டர்கள்: ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திவைப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளைய தினம் (பிப்.24) பணி செய்யும் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படுகிறது.

தற்போது அந்த வாகனங்கள் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திகைக்கபட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறுவிதமான ஸ்கூட்டர்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப். 24-ல் அமல்படுத்தப்படுகிறது. நாளை மாலை 5 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று நாளை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

இத்திட்டத்தில் இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம், இதில் குறைவான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x