Published : 23 Feb 2018 07:48 AM
Last Updated : 23 Feb 2018 07:48 AM
கவுரவக் கொலைகள் போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக கமல் போராட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கமல் கட்சி ஆரம்பித்துள்ளார். மதவெறி, சாதிய பிரச்சினை, கவுரவக் கொலைகள் போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக அவர்கள் போராட வேண்டும். காவிரி பிரச்சினையில் நமது உரிமைகளை பெற ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.
பாஜக, அதிமுக அரசுகளைக் கண்டித்தும், மாற்று கொள்கைகளை வலியுறுத்தியும் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்தும் வலுவான பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ள நிலையில், அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பேரணி நடத்துவோரை தாக்கும் காவல்துறை மற்றும் அதிமுக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT