Published : 23 Feb 2018 07:45 AM
Last Updated : 23 Feb 2018 07:45 AM

பாரதியார் பல்கலை. துணைவேந்தர் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட இரண்டாவது மனுவையும் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

உதவிப் பேராசிரியர் ஒருவரின் தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்வதற்காக ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி, உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருக்கும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் போலீஸ் காவல் முடிந்து துணைவேந்தர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக் கோரி 2-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு நேற்று கோவை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

ஜாமீன் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டதால், துணைவேந்தர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x