Published : 21 Feb 2018 09:03 PM
Last Updated : 21 Feb 2018 09:03 PM

கட்சிக்கொடி உணர்த்துவது என்ன?- கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கமல் தன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். அதற்குப் பிறகு கமல்ஹாசன் பேசுகையில், ''கட்சியின் கொடியில் உற்றுப்பார்த்தால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். ஆறு கைகள் ஆறு மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களாகிய நீங்கள்தான். மக்களையும் நீதியையும் மய்யமாகக் கொண்டு இணைக்கும் கட்சி என்பதால் மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

தராசின் நடுமுள் நாம். எந்தப் பக்கமும் சாயமாட்டோம். நீங்கள் வலதா, இடதா என்று கேட்கிறார்கள். அதனால்தான் கட்சியின் பெயரிலேயே மய்யம் என்று வைத்திருக்கிறோம்'' என்றார் கமல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x